உங்கள் ஹெல்த் பாலிசி முழுமையானதா?
முழுமையாக கவரேஜ் தரும் மெடிக்ளைம் பாலிசிகளை எடுப்பதன் அவசியம் பற்றி நமக்குத் தெளிவாக எடுத்துச் சொன்னார் பொதுத் துறை இன்ஷூரன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர்.
''பெரும்பாலோர் அடிப்படை பாலிசியைத்தான் எடுத்து வைத்திருக்கிறார்கள். இதில் திடீர் உடல் நலக்குறைவு, விபத்தில் சிக்கினால் அதுக்கான சிகிச்சை போன்றவற்றுக்கு மட்டுமே கிளைம் கிடைக்கும். மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்கும் காலத்தில் சம்பள இழப்பு, தீவிர நோய் பாதிப்பு போன்றவற்றுக்கு இழப்பீடு பெற சில ஆயிரம் ரூபாயை பிரீமியமாகக் கட்டி சில ரைடர்களையோ அல்லது புதிய பாலிசிகளையோ எடுத்துக் கொள்வது அவசியம்'' என்றவர் அந்த பாலிசிகள் பற்றியும் விளக்கிச் சொன்னார்.
ஹாஸ்பிட்டல் கேஷ் கவர்!
ஒருவர் நோய்வாய்ப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கும்போது ஏற்படும் சம்பள இழப்புக்கு 'ஹாஸ்பிட்டல் கேஷ் கவர்’ என்கிற ரைடர் பாலிசியை எடுக்க வேண்டும். இந்த பாலிசியின்படி நம் சம்பளத்தில் ஒரு பகுதி இழப்பீடாக கிடைக்கும். மருத்துவமனையில் பத்து நாட்கள் இருந்தால், எல்லா நாட்களுக்கும் இழப்பீடு கிடைக்காது. பாலிசியில் குறிப்பிட்டிருக்கும் நாட்களுக்குத்தான் பணம் கிடைக்கும். அதனால், பாலிசி எடுக்கும்போது எத்தனை நாட்களுக்கு இந்த நிதி உதவி தேவை என்பதைக் குறிப்பிட வேண்டும். அதிக நாட்களுக்கு வேண்டும் என்றால் அதிக பிரீமியம் கட்ட வேண்டியிருக்கும்.கிரிட்டிக்கல் இல்னஸ் பாலிசி
இதுபோன்ற நேரங்களில் தனியாக 'கிரிட்டிக்கல் இல்னஸ் பாலிசி’ எடுக்க வேண்டியதில்லை. லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனங் களின் ரைடர் பாலிசிக்கான பிரீமியத்தைவிட ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் தரும் தனி பாலிசிக்கு பிரீமியம் அதிகம். உதாரணமாக, தனி பாலிசி என்கிறபோது 2 லட்சம் ரூபாய் கவரேஜுக்கு சுமார் 1,500 ரூபாய் பிரீமியம் கட்ட வேண்டும். இதுவே ரைடர் பாலிசி என்கிற போது இதில் பாதி தொகைதான் பிரீமியமாக இருக்கும்.
'கிரிட்டிக்கல் இல்னஸ் பாலிசி’யில் ஒரு நிறுவனம் எட்டு தீவிர நோய்களுக்கு கவரேஜ் உண்டு என்று சொல்லும். வேறு ஒரு நிறுவனம் பத்து தீவிர நோய்களுக்கு கவரேஜ் என்று சொல்லும். எந்த நிறுவனம் அதிகமான நோய்களுக்கு கவரேஜ் கொடுக்கிறது என்பதைக் கவனித்து பாலிசி எடுத்துக் கொள்வது லாபகரமாக இருக்கும்.
தீவிர நோய்களுக்கான மருத்துவச் செலவு அதிகம். அவற்றுக்கான சிகிச்சைக் காலம் அதிகம். இந்த நிலையில், வேலைக்குப் போக முடியாமல் சம்பள இழப்பும் ஏற்படலாம். சில ஆயிரம் ரூபாய் கூடுதல் பிரீமியம் கட்டி முழுமையான இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்தால் நிலைமையை சுலபமாக சமாளிக்கலாமே!
- செ.திருக்குறள் அரசி.
Source - Vikatan Magazine
No comments:
Post a Comment