'ஓஹோ' லாபத்துக்கு ஒரு கூடை ஜவுளிப் பங்குகள்!
''முக்கியமாக மூன்று காரணங்களை வைத்து வருங்காலத்தில் இத்துறை நன்றாக இருக்கும் என்று சொல்லலாம். முதலாவதாக, தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டத்தை (Technology Upgradation Fund Scheme) கடந்த ஜூன் மாதம் 29-ம் தேதி மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. இப்போது மீண்டும் அந்த திட்டத்தைக் கொண்டு வருவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. விரைவில் இந்த திட்டம் அமலுக்கு வந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது இரண்டாவதாக, இப்போதைக்கு சிங்கிள் பிராண்ட் ரீடெய்ல் துறையில் அந்நிய முதலீடு அனுமதிக்கப் பட்டிருக்கிறது. இருப்பினும், மல்டி பிராண்ட் ரீடெய்ல் கடைகளில் இதுவரை அந்நிய முதலீட்டை அனுமதிக்கவில்லை.
மூன்றாவதாக, லைசன்ஸ் வைத்திருப் பவர்கள் மட்டுமின்றி, அனைவரும் நூல் ஏற்றுமதி செய்யலாம் என்று மத்திய அரசு அனுமதித் திருக்கிறது. இந்த உத்தரவு நூல் உற்பத்தி நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த மூன்று காரணங்களையும் வைத்து பார்க்கும்போது டெக்ஸ்டைல் துறை பங்குகள் அடுத்த சில மாதங்களில் நல்ல வருமானம் கொடுப்பதாக இருக்கும்'' என்றவர் நாணயம் விகடன் வாசகர்களுக்காக அத்துறையைச் சார்ந்த ஆறு பங்குகளை ஸ்பெஷலாகத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார்.
Source - Vikatan Magazine
No comments:
Post a Comment