Pages

Monday, April 11, 2011

'ஓஹோ' லாபத்துக்கு ஒரு கூடை ஜவுளிப் பங்குகள்!

'ஓஹோ' லாபத்துக்கு ஒரு கூடை ஜவுளிப் பங்குகள்!

வ்வொரு காலகட்டத்திலும் குடத்திலிட்ட விளக்காக சில துறைகளைச் சார்ந்த பங்குகள் இருந்துவிடுவதையும், அதுவே சிலகாலம் கழித்து குன்றிலிடப்பட்ட விளக்காக மாறி ஜொலிப்பதையும் அவ்வப்போது நாம் பார்த்துதான் வந்திருக்கிறோம். அப்படி வரும் காலத்தில் ஜொலிக்கப்போகும் பங்குகள் ஏதாவது இருக்கிறதா என்று தேடியபோது, ஜவுளித் துறையைச் சார்ந்த பங்குகளை நமக்கு இனம் காட்டினார் ஆனந்த் ரதியின் முதன்மை துணைத் தலைவரான ஏ.கே பிரபாகர்.

என்னென்ன காரணங்களால் டெக்ஸ்டைல் துறை நன்றாக இருக்கும், அத்துறையில் எந்தெந்த பங்குகள் நல்ல லாபத்தைத் தரும் என்று இங்கே விரிவாகச் சொல்கிறார் அவர்...
''முக்கியமாக மூன்று காரணங்களை வைத்து வருங்காலத்தில் இத்துறை நன்றாக இருக்கும் என்று சொல்லலாம். முதலாவதாக, தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டத்தை (Technology Upgradation Fund Scheme)  கடந்த  ஜூன் மாதம் 29-ம் தேதி மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. இப்போது மீண்டும் அந்த திட்டத்தைக் கொண்டு வருவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. விரைவில் இந்த திட்டம் அமலுக்கு வந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது இரண்டாவதாக, இப்போதைக்கு சிங்கிள் பிராண்ட் ரீடெய்ல் துறையில் அந்நிய முதலீடு அனுமதிக்கப் பட்டிருக்கிறது. இருப்பினும், மல்டி பிராண்ட் ரீடெய்ல் கடைகளில் இதுவரை அந்நிய முதலீட்டை அனுமதிக்கவில்லை.
ஆனால், விரைவில் அனுமதி கிடைக்கும் சூழல் நிலவுகிறது. இது இத்துறையில் இருக்கும் மல்டி பிராண்ட் கடைகளுக்கு  சாதக மான விஷயம்.
மூன்றாவதாக, லைசன்ஸ் வைத்திருப் பவர்கள் மட்டுமின்றி, அனைவரும் நூல் ஏற்றுமதி செய்யலாம் என்று மத்திய அரசு அனுமதித் திருக்கிறது. இந்த உத்தரவு நூல் உற்பத்தி நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த மூன்று காரணங்களையும் வைத்து பார்க்கும்போது டெக்ஸ்டைல் துறை பங்குகள் அடுத்த சில மாதங்களில் நல்ல வருமானம் கொடுப்பதாக இருக்கும்'' என்றவர் நாணயம் விகடன் வாசகர்களுக்காக அத்துறையைச் சார்ந்த ஆறு பங்குகளை ஸ்பெஷலாகத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார்.



Source - Vikatan Magazine

No comments: